9.6 C
Munich
Wednesday, October 16, 2024

இஸ்ரேல் மீது 200 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரான்; அதிகரிக்கும் போர் பதற்றம்..!

இஸ்ரேல் மீது 200 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரான்; அதிகரிக்கும் போர் பதற்றம்..!

Last Updated on: 2nd October 2024, 04:57 pm

நேற்று நள்ளிரவு இஸ்ரேல் மீது கடுமையான ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். கிட்டத்தட்ட 200 ஏவுகணைகள் வீசப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாயன்று தெஹ்ரானுக்கு பதிலடி கொடுப்பதாக உறுதியளித்தார்.

“ஈரான் இன்றிரவு ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டது, அதற்கு அது பதில் தெரிவிக்கும்” என்று பெஞ்சமின் நெதன்யாகு தனது பாதுகாப்பு அமைச்சரவையை இரவு நேர கூட்டத்திற்கு அழைத்த போது கூறினார்.ஈரானின் இந்த பதிலடி தாக்குதல், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் அதன் அரபு நட்பு நாடுகளுக்கும் இடையிலான பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் மோதலில் தீவிரமானதாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here