9.6 C
Munich
Wednesday, October 16, 2024

162 கி.மீ வேகத்தில் வீசிய சூறைக்காற்று.. தைவானை புரட்டிப்போட்ட “கிரதான்” சூறாவளி!

162 கி.மீ வேகத்தில் வீசிய சூறைக்காற்று.. தைவானை புரட்டிப்போட்ட “கிரதான்” சூறாவளி!

Last Updated on: 3rd October 2024, 08:51 pm

கிரதான் சூறாவளி காரணமாக தைவானின் காவ்ஷியங் நகரில் கனமழை கொட்டியது. இதன் காரணமாக அங்கு பள்ளிகள், கல்லூரிகள் 3 ஆவது நாளாக மூடப்பட்டன. தேவையின்றி மக்கள் வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவ்ஷியங் நகரில் மணிக்கு அதிகபட்சமாக 162 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

துறைமுகங்கள் மற்றும் வணிகப்பகுதிகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. அனைத்து உள்நாட்டு விமானங்களும் அடுத்த 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 5 நாட்களில் மட்டும் சில இடங்களில் 152 சென்டிமீட்டர் அளவுக்கு மழைகொட்டித் தீர்த்துள்ளது.

சூறாவளிக் காற்றால் 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 102 பேர் காயமடைந்திருப்பதாகவும் முதல்கட்டமாக தகவல் வெளியாகியுள்ளது.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here